Tuesday, January 22, 2013

பிச்சைப்பாத்திரம்

ஒரு காலத்தில் பார்க்கிற பிச்சைக்காரர்களுக்கெல்லாம் எதாவது கொடுத்துட்டு இருந்தேன். பிறகு ஒரு காலத்தில் பிச்சையை ஆதரிப்பது தவறுன்னு அந்த பழக்கத்தை விட்டிருந்தேன். அதோடு இல்லாமல் பிச்சை கேட்பவர்களிடம் சில நேரங்களில் வாக்கு வாதமும் செய்திருக்கிறேன். ஒரு முறை பிச்சை எடுக்கும் ஒரு பாட்டியுடன் சண்டை போடும் அளவிற்கு போய்விட்டது. ஆனால் சமீப காலமாக திரும்பவும் பிச்சைக்காரர்களுக்கு உதவ ஆரம்பித்துள்ளேன். உந்துதல் - இரு வாரங்களுக்கு முன் சென்னை தி நகரில் நிகழ்ந்த நிகழ்வு. நல்லி சில்க்ஸ் வழியே சென்று கொண்டிருந்தேன். வெயில் மண்டையை பிளக்க அருகில் இருந்த ஆவின் கடையில் லஸ்ஸி வாங்கி குடித்துக்கொண்டிருந்தேன். குடித்து முடித்த வெற்று பாக்கெட்களை போட குப்பை தொட்டி இருந்தது. சென்னை வெயிலின் ஆசியால் குப்பை தொட்டி நிரம்பி இருக்க அங்கே வந்த ஒரு பிச்சைகாரர் - பார்க்க படு மோசமாக இருந்தார் - குப்பைத்தொட்டியில் இருந்த வெற்று பாக்கெட் ஒவ்வொன்றாக எடுத்து உரிந்து உரிந்து பாக்கெட்டில் இருந்த கடைசி துளிகளை நக்கிக்கொண்டிருந்தார். இந்தியாவில் இப்படிப்பட்ட காட்சியை பலர் கண்டிருப்போம்; இருந்தாலும் மனம் அதிர்ந்தது; உடனே ஒரு லஸ்ஸி பாக்கெட் வாங்கி அவர் கையில் கொடுத்து விட்டு கிளம்பினேன். அன்றிலிருந்து திரும்பவும் பிச்சைகாரர்களுக்கு உதவ ஆரம்பித்துள்ளேன்.

நீரில் மூழ்கிக்கொண்டிருப்பவனிடம் நீச்சல் பற்றி அறிவுரை எடுபடாது. அதே நேரத்தில் (நான் சண்டை போட்ட அந்த பாட்டி போல) நம் மனித நேயத்தை குறி வைத்து தொழில் செய்யவும் அனுமதிக்கலாகாது. பல நேரங்களில் நம்மால் நிலைமை என்ன என்று கணிக்க முடிவதில்லை; பதில் கிடைப்பதற்குள் traffic signal green ஆகிவிட வண்டியும் கிளம்பிவிடுங்கிறது; நமக்குள் குற்ற உணர்ச்சியே மிஞ்சுகிறது. 

அறிவும் மனதும் போராடும் போர்களங்களுள் இதுவும் ஒன்று; பசியும் நேயமும் இருக்கும் வரை மனமே வெல்கிறது; ஆனால் அது நன்மையா என்பது கேள்விக்குரியே!

No comments:

Post a Comment