Friday, January 11, 2013

சலூனில் சாம்பிராணி

மார்கழிக் குளிரில் விடியற்காலையில் முடி திருத்த போயிருந்தேன் சலூனுக்கு
சலூனில் சாம்பிராணி போட வந்திருந்தார் ஹுசேன் பாய்
சாம்பிராணி புகையை சலூன்காரர் முகம் நோக்கி வீசினார் குரானிலிருந்து படித்தவாறு
சலூன்காரரும் திருப்பாவை பாடியவாரே காணிக்கை கொடுத்து பாயை வழி அனுப்பிவைத்தார்

மார்கழி பனியில் சாம்பிராணி புகை இதமாக இருந்தது
இந்த புகையால் கண்களும் கசங்கவில்லை மனங்களும் நோகவில்லை
புகை கலைய பனி விலக மதம் மறைய தெய்வீக ஒளி மிளிர்ந்தது

சலூன் benchஇல் காத்திருந்தேன் என் முறை வர
தொலைக்காட்சியில் குண்டுவெடிப்பு செய்தி
குண்டு புகைகக்கு இடையே உயிர்களைத் தேடும் அவலக்குரல்கள்
இந்தப் புகையும்  மறைவது என்றோ?


- அ

No comments:

Post a Comment