Monday, November 26, 2012

பிறந்தநாள் வாழ்த்து

ஆண்டுக்கு ஒருமுறை அதுவாய் வந்துபோகிறது
அதற்கு ஏன் உனக்கு வாழ்த்து?
அயராது உன்னை பெற்றெடுத்து வளர்த்த
பெற்றோருக்கு சொல்வேன்
உன் பிறந்தநாள் வாழ்த்து!

Tuesday, November 13, 2012

விலங்குகள் கொண்டாடும் தீபாவளி


ஒருவன் மிருகத்தனமானவன் என்று
தர்க்கம் பேசினாலும்
அவன் மரணத்தை கொண்டாடும்போது
நமக்கும் மிருகத்தனம் ஏறவில்லையா?

உணவுக்காக கொன்றாலும் நன்றி சொல்லியே கொல்வோம்
ஆதிகாலம் முதல் 'Avataar' காலம் வரை
ஆனால் இன்றோ
செத்தவனை கொண்டாட ஊரெல்லாம் உற்சாகம்

குடும்பத்தோடு கொண்டாட ஆண்டுக்கொரு அத்தமம்
வீட்டுச்சூழல் மேம்பட சுற்றுச்சூழல் படுகொலை
செத்தவனும் சாம்பலானான் கொன்றவனும் கடவுளானான்
கண்கட்டி வித்தையாய் காரணம்சொல்லி கபளீகரம்

விளக்கறியா வெட்டில்பூச்சியாய் விலங்குகள் விழிக்க
பட்டாசு ஒலியில் பயந்தோடிய நாய்களும்
மாசுற்ற காற்றால் மயங்கிய மாடுகளும்
பறவைகளும் பிறஉயிர்களும் கடவுளிடம் மன்றாடின

காலம் கனிய கடவுளும் காத்திருக்கிறார் போலும்

அன்று
நாமும் அதே வெட்டில்பூச்சியாய் விழிப்போம்
பூமித்தாய் பூகம்ப bomb வெடிப்பாள்
கடல்தாய் பேரலை புஸ்பானம் விடுவாள்
மின்னல்கள் மத்தாப்பாய் மிளிரும்
வானத்திலிருந்து asteroid ராக்கெட்டுகள் பொழியும்

அப்போது
செத்தாண்டா மனுஷன் என்று
விலங்குகள் கொண்டாடும் தீபாவளி

Friday, November 9, 2012

கிறுக்கல்கள்

1
"கொடுக்கற தெய்வம் கூரைய பிச்சிட்டு கொ.."
முடிப்பதற்குள் மழை கொட்ட
கூடையை தலையில் கவிழ்த்துக்கொண்டு
குடிசையுள் குடைபிடித்தால் பூக்காரி

2
ஆங்கிலம் கலக்காமல் நான்கு வரி எழுதினேன்
அழகான கவிதை என்று retweet செய்தான்
தமிழ் நண்பன்
3
பணம் இருப்பவர்களுக்கு தீபாவளி
பணம் இல்லாதவர்களுக்கு 'Deep'ஆ வலி
  4
கூரை ஏறி கோழி பிடிக்க மறுத்தவன்
கோபுரம் ஏறி கும்பாபிஷேகம் செய்தானாம் 
5
காலம் கனியுமென காத்திருக்காதே
எல்லாக் காய்களும் கனிப்பதில்லை
சில கருகிவிடுகின்றன
சில பிறர் தோட்டத்திற்கு விதைகளாகின்றன
 6
நதிகளை தேசிய மயமாக்காததின் விளைவு
தேசிய நெடுஞ்சாலைகள் நதி போல் காட்சியளிக்கின்றன

Saturday, November 3, 2012

மனிதநேயம்

நேற்று மாலை நண்பரோடு பயணித்திருந்தேன்
time passக்கு நாட்டுநடப்பும் நீளம் புயலும்
'என்ன boss சென்னைக்கு வெறும் காத்து தான் வந்துச்சு மழையே வரல' என்றேன்
'உங்களையும் என்னையும் போல மனுஷங்க இருக்குறப்போ எப்படி arun மழை வரும்' என்றார் நக்கலாக.

சட்டென்று brake அடித்து வண்டியின் வேகத்தை குறைத்து ஓட்டினார்
'road freeயா தானே இருக்கு.. எதுக்கு speed குறைச்சீங்க' என்றேன்
'இல்ல இங்க சேரும் சகதியுமா இருக்கு.. வேகமா போனா நடந்து போறவங்க மேல சேர் அடிச்சிடும்' என்றார்.

புன்னகைத்து ஜன்னல் வெளியே பார்த்தேன்
ஆனந்ததாண்டவம் ஆட மழைமேகங்கள் மின்னலோடு ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தன.