Saturday, November 3, 2012

மனிதநேயம்

நேற்று மாலை நண்பரோடு பயணித்திருந்தேன்
time passக்கு நாட்டுநடப்பும் நீளம் புயலும்
'என்ன boss சென்னைக்கு வெறும் காத்து தான் வந்துச்சு மழையே வரல' என்றேன்
'உங்களையும் என்னையும் போல மனுஷங்க இருக்குறப்போ எப்படி arun மழை வரும்' என்றார் நக்கலாக.

சட்டென்று brake அடித்து வண்டியின் வேகத்தை குறைத்து ஓட்டினார்
'road freeயா தானே இருக்கு.. எதுக்கு speed குறைச்சீங்க' என்றேன்
'இல்ல இங்க சேரும் சகதியுமா இருக்கு.. வேகமா போனா நடந்து போறவங்க மேல சேர் அடிச்சிடும்' என்றார்.

புன்னகைத்து ஜன்னல் வெளியே பார்த்தேன்
ஆனந்ததாண்டவம் ஆட மழைமேகங்கள் மின்னலோடு ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தன.

No comments:

Post a Comment