Sunday, April 29, 2012

கூரை குறை தீர்த்த தலைவா வாழ்க!

சாலையோர சந்திப்பிலிருந்து
கம்பீரமாய் கர்ஜித்தார் தலைவர்
நகரெங்கும் நடனமாடின
பளபளக்கும் பதாகைகள் (banner)

பதாகைகளின் ஆக்கிரமிப்பில்
பாதசாரிகள் அல்லோலப்பட
புலம்பியபடியே நடந்தேன்
பாலத்தின் மேலே
 
வற்றிய ஆறும் சுருங்கிய வயிறும்
சாக்கடை சேறுமாய் குப்பம் மிதக்க
கூரைக்கு பதில் குறைதீர்த்தபடி புன்னகைத்தார்

 வாழ்த்தும் கையுமாய் தலைவர்
 பழைய பதாகையாய்

- அருண்

பொருள் விளக்கம் 
 
அத ஏ மாமு கேக்குற
நேத்து பஜார் பக்கம் போனேனா
ஏதோ கட்சி கூட்டம்னு ஒரே போஸ்டர் பா

தினுசு தினுசா பேன்னர் அடிசிருந்தானுங்க
ரோடெல்லாம் பேன்னர் அடிச்சு நடக்க கூட எடம் இல்லாம ஒரே பேஜாரா போச்சு
இந்த பேமானிங்க பேன்னர் அடிகலைன்னு எவன் அழுதான்னு பொலம்பினே சேரி பக்கம் போனேனா

அங்க நம்ம குப்பத்து ஆளுங்க குட்சைல மழை தண்ணி ஒழுவாம இருக்க
இந்த பழைய பேன்னர்லாம் கூர மேல போட்டிருந்தாங்க மாமு

அப்போதான் விவேக் சொன்னது மனசுக்கு வந்திச்சு

'இந்த அரசியல் கட்சிங்க மாநாடு நடத்துரதுக்கும் ஒரு பயன் இருக்கத்தான் செய்யுது'

No comments:

Post a Comment