Sunday, December 25, 2011

சுனாமியின் சுவடுகளில்

ஆண்டுகள் 7 ஆகியும் ஆழ்காயம் ஆறவில்லை
அமளி அடங்கியபின்னும் அடிமனம் ஓயவில்லை
அலைகள் ஓய்ந்தபின்னும் ஓயாத நினைவலைகள்...

தாயாக இருந்தவள்
   துர்கையாக மாறினாள்
காலனாய் அனுப்பிவைத்தாள்
   கடல் அலையை

ஊற்றினது தான்தானே
   உயிர்ப்பால் என்று
தெரிந்தே பொழிந்தாலோ
   தண்ணீர் கனையை

போதும் போதும் என்று
   பேதைநாம் கதற
தவறாய் உணர்ந்தாலோ
   தாய் இயற்கை

பசுமையே இல்லாத
   பாலைவனமாய் மாற
தமிழகம் சிதைய
   தவிக்கிறோம் இன்று

எமனாய் அனுப்பினாய் கடல்நீரை அன்று
எமனாய் ஆக்குகிறாய் நதிநீரை இன்று

தண்ணீரில் மிதந்தோம் பிணங்களாய் அன்று
தண்ணீரின்றி தவிக்கிறோம் ஜடங்களாய் இன்று


போதும் தாயே உன் விளையாட்டு
ரணங்கள் ஆயிரம் நீ நிப்பாட்டு
உன் பிள்ளைகள் வாழ வழிகாட்டு

தமிழ்ப்பால் குடித்த எங்களுக்கு
வாய்ப்பால் ஊற்றிவிடதே!

- அருண்

No comments:

Post a Comment