Friday, March 11, 2011

கரிசனம்

 பல நாட்கள் கழித்து நண்பரை காண நேர்ந்தது.
  
'என்ன boss... வீட்ல எலி தொல்லை அதிகமோ?? தலை முடி ட்ட வெட்டியிருக்க!!' என்று நகைத்தார்.

'அட.. comedy பண்ணாதீங்க  boss... H1B visa கிடைகனும்னு சாமிக்கு வேண்டி மொட்டை போட்டிருந்தேன்... அதான்'

'oh super... Best of Luck'

'விடுங்க boss... என்னோட application reject அயிடுச்சு'

'oh...'

'நம்ம கையில என்ன இருக்கு... கடவுள் நமக்கு தந்தது அவ்வளவுதான்னு நினைச்சுக்க வேண்டியது தான்... அவரும் எத்தனைபேர் வேண்டுதலைதான் நிரைவேற்றுவார்!!' என்று புன்னகைத்தபடி topic மாறியது.

இருவரும் தேனீர் அருந்தியபடி சமீபத்திய நிகழ்வுகளை பரிமாரிக்கொண்டோம்.

நேரம் கழிந்தது...

நண்பரிடம், 'நேரம் ஆயிடுச்சு... கிளம்புறேன்', என்று சொல்லியபடி நான் கிளம்ப... வழி அனுப்ப அவரும் பேருந்து நிலையம் வந்தார். சற்று நேரத்தில் ஓர் பேருந்து வந்தது. நண்பருக்கு பிரிவிடை கூறி பேருந்தில் ஏற முற்படும்போது, யாரோ ஒருவர் முந்தியடித்துகொண்டு (தள்ளி விட்டு) பேருந்தில் பாயிந்து ஏற பேருந்தும் கிளம்பி சென்றது.

நான் கடுப்பில் நண்பரை பார்த்து, ' பாத்தீங்களா boss... மக்கள் எப்படி இருக்காங்க...'

நண்பர் பதிலுக்கு , 'freeயா விடுங்க boss.... அவருக்கு என்ன அவசரமோ... கடவுளுக்கு கரிசனம் காட்டும் நீங்க, சக உடன்பிறப்பிர்க்கும் கொஞ்சம் காட்டுங்களேன்!!!' என்றார்.


'சருக்' என்று உரைத்தது. மன இருக்கம் மறைந்தது.

பின்குறி 1:  இது ஒரு புனைப்பு கதையே!!
பின்குறி 2:  உடன்பிறப்புகள் வார்தையில் எந்த அரசியல் சாயமும் இல்லை!!

2 comments:

  1. idhu sonda sarakka ???? forward ah ?

    ReplyDelete
  2. original... my posts are original unless otherwise specified :)

    ReplyDelete